36. திருவையாறு
பதிக வரலாறு:
திருப்பூந்துருத்தியை
வணங்கிப் பதிகம்பாடி, அப்பர் சுவாமிகளிடம் விடை
பெற்றுக்கொண்டு, காவிரியாற்றைக் கடந்து, திருநெய்த்தானத்து
நெய்யாடிய பெருமானைப் போற்றி, திருவையாற்றையடைந்த
பிள்ளையார் ‘கலையார் மதி’ என்னும் இப்பதிகத்தை
யருளினார்கள்.
பண்: தக்கராகம்
பதிக எண்:36
திருச்சிற்றம்பலம்
382. கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. 1
383. மதியொன் றியகொன்
றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு
__________________________________________________
1. பொ-ரை: ஒரு கலைப் பிறைமதியோடு
வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை
உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த
முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை
அள்ளிவரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு
ஆகும்.
கு-ரை: இப்பதிகப்பாடல் பத்தும்
இறைவன் இடம் திருவையாறு என்கின்றது. பாடல்கள்தோறும்
இறைவனது மதி, கொன்றை, கங்கை, வன்னி, கொக்கிறகு,
தலைமாலை முதலிய அணிவகைகளும அவர் வீரமும் அறிவிக்கப்பெறுகின்றன.
உரநீர் - வலியநீர். மலையாரம் - மலையிற்பிறந்த
முத்துக்கள்.
2. பொ-ரை: பிறைமதி பொருந்திய
சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும், தக்க யாகத்தில்
வீரபததிரரை ஏவிச் சந்திரனைக் காலால் உதைத்தவனுமான
சிவபெருமான்
|