1006. ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே. 4
1007. மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 5
1008. மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யா ளணியாளே. 6
1009. விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே. 7
___________________________________________________
கு-ரை: ஐயன் - தலைவன்.
பொய்யில்லாதவருக்கு உலகமே உரிமையாம் என்பதை
விளக்கியவாறு.
4. பொ-ரை: திருமுதுகுன்றத்து ஈசனை நீர்
அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின்
உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும்
நீங்கும்.
கு-ரை: நேசமாகி - அன்பாகி. பாசவினை
- பாசமும் வினையும்.
5. பொ-ரை: அழகிய திருமுதுகுன்றத்து
இறைவரைப் பணிபவர்கள், பிணிகளிலிருந்து விடுபட்டு
உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.
கு-ரை: மணி - அழகு, முத்துமாம். தணிவார்
- அமைதிஉறுவார்கள்.
6. பொ-ரை: அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள
திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு
அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு
இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு
உமக்கு அணியள் ஆவாள்.
கு-ரை: மொய் - நெருக்கம். ஐயா! எனத்
தோத்திரிக்க வல்லவராய் இரவலர்க்கு இல்லை என்று
பொய்யும் சொல்லாதவர்களுக்குச் செய்யவள் அணியள்
ஆவாள் என்றவாறு.
7. பொ-ரை: திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை
உடைய சிவபிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர்,
படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை
உடையவராவர்.
|