தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச்
சம்பந்தன்
இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட்
கிடர்போமே. 11
திருச்சிற்றம்பலம்
___________________________________________________
உடையவனாய்ப் போற்றும் சண்பையர்
தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன்,
இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள்
பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.
கு-ரை: புறவத்து ஈசனை, இப்பதிகம்
சொல்லி ஏத்த வல்லாருக்கு இடர்போம்
என்கின்றது. தன்னியல்பில்லாச் சண்பையர் கோன்
- சீவபோதமற்ற திருஞானசம்பந்தர்.
நால்வர் நான்மணி மாலை
கொள்ளைகொள்ள
வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்
தள்ளுந் திருஞான சம்பந்தா - வெள்ளமிடும்
ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்
காடேறப்
புக்கவரு கர்.
வானும் புகழ்புகலி
மன்னன் றொடர்பொன்று
தேனுந் திதழியோன் சீரேடு - தானுங்
கரியாய் மொழியுங் கரியாய் விடாம
லெரியா ரழல்வீழ்ந் தெழுந்து.
அறத்தா
றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து.
- சிவப்பிரகாச
சுவாமிகள். |
|