பக்கம் எண் :

 98. திருச்சிராப்பள்ளி973


தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச்

சம்பந்தன்

இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட்

கிடர்போமே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

உடையவனாய்ப் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.

கு-ரை: புறவத்து ஈசனை, இப்பதிகம் சொல்லி ஏத்த வல்லாருக்கு இடர்போம் என்கின்றது. தன்னியல்பில்லாச் சண்பையர் கோன் - சீவபோதமற்ற திருஞானசம்பந்தர்.

நால்வர் நான்மணி மாலை

கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்
தள்ளுந் திருஞான சம்பந்தா - வெள்ளமிடும்
ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்
காடேறப் புக்கவரு கர்.

வானும் புகழ்புகலி மன்னன் றொடர்பொன்று
தேனுந் திதழியோன் சீரேடு - தானுங்
கரியாய் மொழியுங் கரியாய் விடாம
லெரியா ரழல்வீழ்ந் தெழுந்து.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை யூர்ந்து.

- சிவப்பிரகாச சுவாமிகள்.