பக்கம் எண் :

 100. திருப்பரங்குன்றம்987


1077. அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப

வரும்பீன்று

குரவம்பாவை முருகமர்சோலைக்

குற்றாலம்

பிரமன்னோடு மாலறியாத

பெருமையெம்

பரமன்மேய நன்னகர்போலும்

பணிவீர்காள். 9

1078. பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு

பெடைபுல்கிக்

குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங்

குற்றாலம்

இருந்துண்டேரு நின்றுண்சமணு

மெடுத்தார்ப்ப

அருந்தண்மேய நன்னகர்போலு

மடியீர்காள். 10

___________________________________________________

9. பொ-ரை: பணியும் தொண்டர்களே! பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம். பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன் மேவியுள்ள நன்னகராகும்.

கு-ரை: குரவம்பாவை பாம்பின் பல்லைப்போல் அரும்பீன்று மணங்கமழும் சோலை சூழ்ந்த குற்றாலம், அயனும் மாலும் அறியாத பரமன் நகர் என்கின்றது. முள் எயிறு - முள் போன்ற பல்.

10. பொ-ரை: அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.

கு-ரை: வண்டு பெண் வண்டைப் புணர்ந்து செவ்வழிப் பண்ணைப் பாடும் குற்றாலம், தண்ணிய இறைவன் மேய நகர்