பக்கம் எண் :

1217

     32. ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக
மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன
நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ
நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.

          வாழ்த்து

வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.   
    
                             -பெரிய புராணம்.

வான்முகில் வழாது பெய்க
     மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
     குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
     நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
     விளங்குக உலக மெல்லாம்.                             -கந்தபுராணம்.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

                       -திருவிளையாடற் புராணம்.

திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி
     சேரும்நின்றன்
மருவார் மரபும் திருநீறும் கண்டியும்
     வாழ்கஅருட்
குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்
     கோநிரைகள்
தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த
     தேசிகனே.

                          -ஆதீன அருள் நூல்