பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)95. திருஇன்னம்பர்1139

3827. ஏத்தரும் புகழணி யின்னம்பர் மேவிய
  தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.               8

3828. இயலுளோர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
  அயனுமா லறிவரி யீரே
அயனுமா லறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.                 9

3829. ஏரமர் பொழிலணி யின்னம்பர் மேவிய
  தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவர்
ஆர்துய ரருவினை யிலரே.                 10


எனும் பதினொன்றாந் திருமுறையாலறிக.

     8. பொ-ரை: போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விருமபி வீற்றிருந்தருளுபவரும், தூர்த்தனான
இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே! தூர்த்தனான இராவணனை
அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும், நற்குணம் உடையவராவர்.

     கு-ரை: ஏத்த அரும் - துதித்தற்கரிய, புகழ். துர்த்தன் - பரதார
விருப்பினனாகிய இராவணன், தொலைவு செய்தீர் - வலிமையழியச் செய்தீர்,
கூர்த்த - மிகுந்த, நற்குணம் - சத்துவகுணம்.

     9. பொ-ரை: நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பிரமனும்,
திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு
உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை.

     கு-ரை: இயல்உளர் - சமய விசேடாதி தீக்கை பெற்ற தகுதியுடைய
அடியார், மறுபிறப்பு இலர் ஆவர்.

     10. பொ-ரை: ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள