பதிக வரலாறு:
சண்பைக்காவலர்,
திருவத்துறையினை இறைஞ்சிய நாள்களில், அன்பர்களுடன் சென்று வழிபட்டபோது பாடி அருளியது
இத்திருப்பதிகம்.
திருமுக்கால்
பண்:
சாதாரி
ப.தொ.எண்:
354 |
|
பதிக
எண்: 96 |
திருச்சிற்றம்பலம்
3831.
|
நல்வெணெய்
விழுதுபெய் தாடுதிர் நாடொறும் |
|
நெல்வெணெய்
மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வண மிடுவது சொல்லே. 1 |
1.
பொ-ரை: நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட
திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர். திருநெல்வெண்ணெய் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே!
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத்
தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும்
சொற்களாகும்.
கு-ரை:
நல்வெ(ண்)ணெய் விழுது - நல்ல வெண்ணெயை உருக்கிய
நெய்யை. பெய்து - ஏனைய பால், தயிர், கோமயம், கோசலம்
என்பவற்றோடு நாள்தோறும் பஞ்சகவ்யமாகக் கூட்டி நாள்தோறும் ஆடுதிர்
- திருமஞ்சனம் கொண்டருள்வீர், உம்மை நாள்தோறும் துதிக்கும் சொற்களே,
பயன்தரும் சொல்லெனப்படுவன. வண்ணம் - அழகு, சொல்லுக்கு அழகாவது,
சுருங்கச் சொல்லல் முதலிய பத்தும். சொல் இடுவது - துதிப்பது, புகழ்வது,
வாழ்த்துவது முதலியன. தீவண்ணர் திறம்ஓருகாற் பேசா ராகில் பெரும்
பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. வணங்கத்
தலைவைத்து, வார்கழல் வாய் வாழ்த்தவைத்து என்பன இங்குக்
கொள்ளத்தக்கன.
|