பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)104. திருப்பரிதிநியமம்1199

3915. வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி
       விரிபுன் சடைதாழத்
துஞ்சிருண் மாலையும் நண்பகலுந்
     துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங்
     கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும்
     பரிதிந் நியமமே.                     4


உடைய உமாதேவி அஞ்சும்படி, நீண்ட துதிக்கையையுடைய யானையின்
தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவபெருமான். அவர் நான்
நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர். என் பெண்மை நலத்தை இழந்து
அவரையே பற்றுமாறு செய்தவர். அத்தலைவர் வீற்றிருந்தருளும் இடம்
வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வாள் முகம் - ஒளி பொருந்திய முகத்தையும். வார் குழல் -
தொங்கும் கூந்தலையும். வாள் நெடும் கண் - வாள் போன்ற நெடிய
கண்களையும். வளைத்தோள் - மூங்கில் போன்ற தோளையும் உடைய. மாது
- உமை அம்மையார், அஞ்ச. பைங் களிறு - கரிய யானை (பச்சை, நீலம்,
கறுப்பு இந்நிறங்களுள் ஒன்றனை மற்றொன்றாகக் கூறுதல் மரபு) மேல்
நிகழ்வித்து - உடம்பின்மேற் போர்த்து. நாண் - பிறர்முன் நான் நாணுதலை.
முகம் - என்னிடத்து. காட்டி - உண்டாகச்செய்து. நலம் - பெண்மை
நலத்தை. பாண் முகம் - மூக்கால் ஒலித்துப் பாடுதலையுடைய வண்டு இனம்.

     4. பொ-ரை: சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடு
காட்டில் நடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும்
உறங்குகின்ற இரவிலும், மாலையிலும், நண்பகலிலும், பூத கணங்கள்
துணைவரப் பிச்சை ஏற்பவர். அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய
என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள்
யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும்
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வெம் சுரம் - கொடிய பாலைவனம் போன்ற சுடு காட்டில்.
சேர் - அடைவதாகிய. ஓர் ஆடல் - திருவிளையாடலை. பேணி -
மேற்கொண்டு. இருண் மாலை - பின்மாலையாகிய இரவிலும் நடுப்பகலிலும்.
துணையார் - பூதங்கள் முதலிய துணையுடையவ