பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)104. திருப்பரிதிநியமம்1201

சங்கொடு சாய லெழில்கவர்ந்த
     சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற்
     பரிதிந் நியமமே                      6

3918. பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப்
        பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி
     மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர வெழில்கவர்ந்த
     விறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும்
     பரிதிந் நியமமே.                     7


திருமுடிமேல் சூடியவர். எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத்
திரிபவர். நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர, என் தோற்றப்
பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான
முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: திசை - திசைகளில். ஆர் - பொருந்திய (கிடைக்கக் கூடிய)
பலி தேர்வாராய். சங்கு, சாயல் - எழில். கவர்ந்த - உடம்பில் தங்காதவாறு
செய்த என்பது பொருள். புறவின் - முல்லை நிலத்தையடுத்ததாகிய. சைவன்
- சிவனுக்கு ஒரு பெயர் "சைவா போற்றி தலைவா போற்றி" என்பது
திருவாசகம்.

     7. பொ-ரை: சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை
பின்புறம் விளங்கித் தொங்க, பெரிய மழுப்படையைக் கையிலேந்தி,
வேதங்களைப் பாடி, திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும்
பிச்சையேற்றுத் திரிவார். அவர், என் முன்கையில் அணிந்துள்ள
வளையல்கள் கழன்றுவிழ, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பறை யொலியும், சங்கொலியும்
விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப் பரிதிநியமம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: பின் தயங்க - பின்புறம் விளங்கித் தொங்க. மனைகள் -