பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)108. திருஆலவாய்1233

3959. அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
  கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        4
 

3960. அந்த ணாளர் புரியு மருமறை
  சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே


எம் முதல்வரே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும்.
திருவருள்புரிவீராக!

     கு-ரை: மறை வழக்கம் - மறையின்படி ஒழுகுதல். வழக்கம், தொழிற்
பெயர்; நடத்தல் என்பது பொருள். பறிதலை - பறிக்கப்பட்ட தலை.கையர் -
வஞ்சகர். முறிய - தோற்க. மறி - மான் கன்று.

     4. பொ-ரை: ஒளிபொருந்திய பிறைச்சந்திரனை அணிந்த முதல்வனே!
வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கைகளை
வெறுக்கும் சமணர்களாகிய கீழோர்களைத் தடுத்து அவர்களோடு அடியேன்
வாது செய்ய உமது திருவுள்ளம் யாது? தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும்
எம் ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிகவேண்டும்.
திருவருள்புரிவீராக!

     கு-ரை: அறுத்த - வரையறுத்துக்கூறிய. அங்கம் ஆறு ஆயின
நீர்மையை - வேதத்தின் அங்கங்கள் ஆறு ஆயின தன்மையை. கறுத்த -
கோபித்த. “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (தொல்காப்பியம் உரி
இயல். 76.) வாழ் அமண் கையர்கள் - வாழ்க்கையையுடைய
அமணர்களாகிய கீழோர். வாழ் என்பது பகுதியே நின்று தொழிற்பெயர்
உணர்த்திற்று. செறுத்து - தடுத்து. “செறுத்தோறு உடைப்பினும்
செம்புனலோடு ஊடார்” (நாலடியார். 222) முறித்த - வளைத்த. கண்ணி -
தலைமாலை.

     5. பொ-ரை: நெருப்பில் வெந்த திருவெண்ணீற்றினை அணியும்
வேறுபட்ட இயல்புகளையுடைய சிவபெருமானே! அந்தணர்கள்