4025. |
சடையணிந்ததும்
வெண்டலை மாலையே |
|
தம்முடம்பிலும்
வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே
பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூதக ணங்களே
போற்றிசைப்பன பூகத ணங்களே
கடைகடோறு மிரப்பது மிச்சையே
கம்பமேவி யிருப்பது மிச்சையே. 2 |
பாவை - பெண்ணை.
தன் உருமேல் - தன் உடம்பின்மேல். ஒருபாகன் -
ஒருபாகத்தில் உடையவன். வேதத்துவனி - வேதத்தின் முழக்கம். மால் -
பெரிய. எரி - எரிகின்ற. வேதத்து - வெம்மையையுடைய. வனியே -
நெருப்பே. எரிவன்னி - வினைத் தொகை. வேது - வெம்மை. அத்து -
சாரியை. ஆயும் - ஆராயத்தக்க. நன் பொருள் - நல்ல கருத்துக்கள்
எல்லாவற்றிலும், நுண்பொருள் - நுட்பமான கருத்தாக. ஆதி - ஆவாய்.
அரும் பொருள் ஆதியே - கிடைத்தற்கு அரிய பொருளாயுள்ள முதல்வனே.
காய - போர் புரிய (வந்த). வில்மதன் - வில்லையுடைய மன்மதன். பட்டது
- முதற்கண் அடைந்தது. கம்பம் - நடுக்கமேயாம். காய - காரியம்
காரணமாக உபசரிக்கப்பட்டது. காமன் பட்டது கம்பம் என்பதை நந்தி
தேவர் காப்பும் ஆணையும் உற்று நோக்கி நெடிதுயிர்த்து உளம் துளங்கி
விம்மினான் எனவரும் காம தகனப் படலத்தான் அறிக. கம்பம்:- ஏகம்பம்
என்பது கம்பம் என முதற் குறைந்து நின்றது. ஏக + ஆம்பரம் = ஏகாம்பரம்
- (ஒற்றை மாமரம்) ஏகம்பம் என மருவிற்று. வேதத்து + வனி = வேத
விதிப்படி வளர்க்கப்பெறும் வேள்வித் தீ எனலே பொருந்துவது.
2.
பொ-ரை: சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை
மாலை ஆகும். உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார். அழகிய கையில்
சூலப்படை ஏந்தி உள்ளவர். பரந்து விளங்கும் கையைப் படை போன்று
கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமானின் கண்
ஆகும். பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும், போற்றிசைப்பனவும்
பூதகணங்களே. அப்பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது
உணவே. அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
சடையணிந்தது வெண்டலையாகிய மாலை - (நகு
|