பக்கம் எண் :

1338திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4099. தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்
       தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோறு மின்புறு கின்ற
     குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்
     குறியின்க ணெறியிடை வாரா
அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த
     வாலவா யாவது மிதுவே.              10

4100. பன்னலம் புணரும் பாண்டிமாதேவி
       குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீ ராலவா யீசன்
     றிருவடி யாங்கவை போற்றிக்


செய்து போற்றுகின்ற, விண்ணிலுள்ள திருமாலும், பிரமனும் கீழும்
மேலுமாய்ச் சென்று இறைவனின் அடிமுடி தேட முயன்று காண
முடியாவண்ணம் அனற்பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு
மகிழ்ந்து வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.

     கு-ரை: மண்ணெலாம்நிகழ - உலகமுழுதும் ஒரு செங்கோல்
ஆட்சியின் கீழ் நடைபெற.

     10. பொ-ரை: சிவத்தொண்டர்கள் எல்லாத் திசைகளிலும்
சிவபெருமானைத் தொழுது, அவர் அருட்குணத்தைப் போற்றி,
அருட்செயல்களை மகிழ்ந்து கூறக்கேட்டு இன்புறும் தன்மையுடையவர்
குலச்சிறையார். அவர் பக்தியுடன் வழிபடுகின்ற, புத்த, சமணத்தைப்
பின்பற்றுபவர் கொள்ளும் குறியின்கண் அடங்காத நெறியுடைய,
இவ்வண்டத்துக்கெல்லாம் நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருத்தலம் இதுவேயாகும்.

     கு-ரை: தன் குணத்தினைக் குலாவக்கண்டு - (தனது -
சிவபெருமானது) குணங்களைப்பாராட்டும் அடியார்களைக்கண்டு மகிழ்கின்ற
குலச்சிறை.

     11. பொ-ரை: பலவகைச் செல்வ நலன்களும் வாய்க்கப் பெற்ற
பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையார்