பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)04. திருவாவடுதுறை429

2843.      பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
       அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
     புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
     பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 10

2844.      அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
       இலைநுனை வேற்படை யெம்இறையை
     நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
     விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலிமிசை நிலையிலரே. 11

திருச்சிற்றம்பலம்

     10. பொ-ரை: புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட்படுத்தாது
உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே! பித்த நோயால்
மயங்கும் நிலையுற்றாலும், தலைவா! உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல்
என் நா வேறேதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ?
(உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்)
தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு
அழகாகுமா?

     கு-ரை: பித்து - பித்தம். புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே - இவ்வடிகளில் வரும் உரைக்க
என்னும் செய என் எச்சம், காரண, காரிய, உடனிகழ்ச்சி யல்லாத பொருளின்
கண்வந்தது "வாவி தொறும் செங்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்
காட்ட" என்புழிப்போல.

     11. பொ-ரை: அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய
திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப்
படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய
ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ்