18. திருவைகல் மாடக்கோயில் |
பதிக வரலாறு:
திருக்கோழம்பத்தைக்கண்டு
இறைஞ்சி, மன்றுளார் மகிழ் வைகல்
மாடக்கோயிலைச்சார்ந்து, அதில் மன்னிய மருந்தை வழிபட்டுப் போற்றி
மொழிந்த செந்தமிழ்மாலை இத்திருப்பதிகம்.
பண்:
காந்தார பஞ்சமம்
ப. தொ. எண்: 276 |
|
பதிக
எண்:18 |
திருச்சிற்றம்பலம்
2987. |
துளமதி யுடைமறி தோன்று கையினர் |
|
இளமதி
யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே. 1
|
2988. |
மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர் |
|
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே. 2 |
1.
பொ-ரை: இறைவன், துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை
ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம்பிறையை அணிந்துள்ள சடையன். எம்
தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள்
வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை
வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும்.
கு-ரை:
து(ள்)ளமதியுடைமறி - துள்ளிக் குதிக்கக் கருத்து உடையமான்
கன்று. உளம் - உள்ளம். வைகல் - தலத்தின் பெயர். மாடக்கோயில்
ஆலயத்தின் பெயர்.
2.
பொ-ரை: இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர்.
வேதத்தை அருளிச்செய்தவர். அவர், மை தீட்டிய கரிய கண்ணுடைய
மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும்
|