|
கண்ண
லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ண லெங்கட வுள்ளவன் அல்லனே. |
3270. |
ஏரி னாருல கத்திமை யோரொடும் |
|
பாரி
னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே. 5 |
3271. |
துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர் |
|
கொள்வ
னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே. 6 |
பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில்
வீற்றிருக்கும் அண்ணலாவார்.
அவரே எம் கடவுள் அல்லரே?
கு-ரை:
பண் - இசையின். நலம் - இனிமை. பட - பொருந்த. வண்டு,
அறை - பாடுகின்ற. (கொன்றை). அலங்கல் உகந்த - மாலை விரும்பிய,
தலைவனார். நலம் கண்கவரும் கழிப்பாலை - எனமாற்றி, கண்ணைக் கவரும்
பொலிவை உடைய கழிப்பாலை யென்க. நலம் - பொலிவு
5.
பொ-ரை: எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு,
மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும்
சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும்
சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள்.
கு-ரை:
ஏரின் ஆர் - அழகால் மிகுந்த. உலகத்த -
விண்ணுலகத்திலுள்ள. இமையோரோடும் - தேவர்களுடனே;
மண்ணுலகத்திலுள்ள யாவரும் கலந்து துதிக்கின்ற. காரின் - மேகத்தினால்.
ஆர் - படியப்பட்ட. சோலை ஆர் என்பதில் செயப்பாட்டு வினைவிகுதி
குன்றியது. சீரினார் - சிறப்பை உடையவர்.
6.
பொ-ரை: துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில்
ஏந்தி, ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய
|