பதிக வரலாறு:
சந்தமறைதந்த
சம்பந்தர், மாதவிப் பந்தர் மணங்கமழும்
திருக்கருகாவூரில் அந்தமில்லாச் சுந்தரக் கடவுள் வண்ணத்தைச் சிந்தை
இன்புறப் பாடியது இந்செந்தமிழ்ப் பதிகம்.
பண்:
கௌசிகம்
ப.தொ.எண்:304 |
|
பதிக
எண்: 46 |
திருச்சிற்றம்பலம்
3288. |
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே |
|
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 1 |
3289. |
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
|
|
கமுத நீழலக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருவாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 2 |
1.
பொ-ரை: முத்துப் போன்ற புன்னகை கொண்டு விளங்கும்
உமாதேவி அஞ்சுமாறு மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப்
போர்த்திய கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர்.
அவர் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
முத்து இலங்கும் - முத்தைப்போல் விளங்குகின்ற. அழலும்
அழல் - கடு நெருப்பு. வண்ணம் - நிறம். தன்மையுமாம்; செழுநீர்
புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீ வண்ணனே.
2.
பொ-ரை: கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய
சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே. நும் பணி
ஆனது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு
அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம் போன்று இனிமை
தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப்போன்ற சிவந்த வண்ணமாகும்.
|