குருபாதம் |
பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் |
1திருஞான சம்பந்தர்2வாகீசர் 3சுந்தரர் |
4திருவாத வூரர் மற்றைத் |
5திருமா ளிகைத்தேவர்6சேந்தனார்7கருவூரர் |
தெள்ளு8பூந்துருத்தி நம்பி |
வருஞான 9கண்டராதித்தர10வே ணாட்டடிகள் |
வாய்ந்த11திரு வாலி யமுதர் |
மருவு12புரு டோத்தமர் 13சேதிராயர் 14மூலர் |
மன்னுதிரு 15ஆல வாயார் |
ஒரு 16காரைக் காலம்மை 7ஐயடிகள் 18சேரமான் |
ஒளிர் 19கீரர் 20கல்லாடனார் |
ஒண் 21கபிலர்22பரணர்மெய்உண 23ரிளம்பெருமானொடு |
ஓங்கும் 24அதிராவடிகளார் |
திருமேவு 25பட்டினத்தடிகளொடு |
26நம்பியாண்டார் நம்பி 27சேக்கிழாரும் |
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண் டருள்செய்த |
தெய்விகத் தன்மையோரே. |
- புலவர். திரு. வை. தருமலிங்கம் பிள்ளை. |
தமிழாசிரியர், தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை, |
தருமபுரம். |