250 | திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | (ஐந்தாம் திருமுறை) | |
| திருக்குறுந்தொகை | ப.தொ.எண்:114 | பதிக எண்:1 | திருச்சிற்றம்பலம் | 1071. அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. | | 1 |
| 1. பொ-ரை: பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன்? | கு-ரை: அன்னம் - வீட்டின்பம். "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" என்னும் திருவாசகத்தில் சோறு என்பது பேரின்பம் என்னும் பொருள் பயத்தல் காண்க. கடவுளை அன்னம் (அமுதம்) என்னும் சொல்லால் குறித்தலுமுண்டு. தான் இறவாதுநின்று பிறர் இறப்பை நீக்குதலால். 'பிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால்வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார்' என்னும்தேவாரத் திருப்பாடலில் அமுதம் என்ற சொல் வீடுபேறு என்னும் பொருள் பயக்குமாறறிக. இனி, தில்லையில் இன்றும் பாவாடை நிவேதனம் உண்டு. பண்டு இது மிகப் பெரிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். அன்னம்பாலிக்கும் தில்லை என்பது அது குறித்ததுமாம். சிறுமை - அம்பலம் சிற்றம்பலம். பேரம்பலம் இருத்தலின் பிறிதின் இயைபு நீக்கிய அடைகொளியாகும். சிதம்பரம் என்பது உணர்வு வெளி என்னும் பொருட்டு; அஃது ஏனைய அம்பரங்களை நீக்கியதாதலின் அதுவும் அவ்வடைகொளியே. பொன்னம் - பொன்னுலக வாழ்க்கை. ஆகுபெயர். பொன் எனலும், பொன் - அம் எனப்பிரித்து உரைத்தலும் கூடும். பொன் என்னும் நிலைமொழி வருமொழியொடு புணருங்கால் அம்முப்பெறுதல் பெருவழக்கு. "பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி" (தி.8 திருவெம்பாவை 16.) "பொன்னஞ் சிலம்பு" (இறையனார் களவியல் மேற்கோள் சூ. 18. 146) "பொன்னங்கடுக்கை" (கந்.கலி.93) "பொன்னங் கமலம்" (மீனாட்சி.பிள்.24) "பொன்னங்குழை" (முத்து. பிள். 394) "பொன்னங்கொடி" (முத்து. பிள். 424) பொன்னஞ். சிலை" (சிதம்பர. மும். 542) "பொன்னங்குவடு" | | |
|
|