கு-ரை: அருக்கன் - சூரியன். அரனுரு - அட்டமூர்த்த வடிவங்களில் ஒன்று. 9.பொ-ரை: பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர். கு-ரை: அமுது - அன்பராயவர் உள்ளத்து ஊறும் இறைவன் திருவருள் மாயன் - திருமால். 10.பொ-ரை: கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள், இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர். கு-ரை: அரட்டு - துட்டச்செயல். அருத்தி - அன்பு. கயவக் கணம் - கீழ்மக்கட்கூட்டம். |