வேறு அணி புவனபோகம்- வேறுபட்ட நிரையாகிய உலகங்களில் உள்ள நுகர்ச்சிகள். ‘‘யோகம்’’ என்றது. ‘முத்தி’ என்னும் பொருட்டாய், அந்நிலையில் விளையும் இன்பத்தைக் குறித்தது; எனவே, இவ்விரண்டாலும், இறைவன் பந்தமும், வீடுமாய் நிற்றலைக் குறித்தவாறாதல் அறிக. அற்புதம்-வியப்பு; புதுமை. ‘அம் பொன்னால் செய்த’ என மூன்றாவது விரிக்க; ‘‘தூயசெம் பொன்னினால்-எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’’ என்று அப்பரும் அருளிச்செய்தார். இசைதல்-கூடுதல். 7, தனதன்-குபேரன்.தாணு-நிலைபெற்றிருப்பவன்.‘‘கனகநற்றூணே’’ என்றதை, ‘‘மாசொன்றில்லாப்-பொற்றூண்காண்’’ (திருமுறை-6,8,1) என்றதனோடு வைத்துக் காண்க. கொழுந்து-தளிர்; இஃது அழகு மிக்கதாய் இன்பம் தருவது கண்கள்-கணுக்களைக் குறித்த சிலேடை. அனகன்-பாவம் இல்லாதவன்; என்றது. ‘வினைத் தொடக்கு இல்லாதவன்’ என்றதாம். குமரன்-முருகன், ‘குமர விநாயகர்’ என்னும் உயர்திணை உம்மைத் தொகை ஒருசொல்லாய்ப்பின், ‘‘சனகன்’’ என்பதனோடு, நான்காவதன் தொகைபடத் தொக்கது. சனகன் தந்தை. அமரர் சேகரன்-தேவர் கூட்டத்திற்கு மகுடம்போல விளங்குபவன். இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, ‘அம்பலத்து’ என்றதனோடு தொகைச் சொல்லாயிற்று. ‘அமரசேகரன்’ எனவும் பாடம் ஓதுப. ‘நின்’ என்பது, திருமுறைகளில், ‘நுன்’ என வருதலை அறிந்துகொள்க. ‘‘நுகருமா நுகரே’’ என்றது. |