பக்கம் எண் :

திருமுறை]2. கோயில்19


சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட
   செல்வச்சிற் றம்பலக் கூத்தா!
பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
   பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.           (11)
 

திருச்சிற்றம்பலம்
 


எனவும்   பாடம் ஓதுப. ‘‘தொண்டனேன்’’  என்பதன்பின், ‘‘ஆகலின்’’
என்னும்    சொல்லெச்சம்    வருவித்து,    அதனை,   ‘‘பொறுப்பர்’
என்பதனோடு  முடிக்க.  ‘புலியூராகிய  தில்லை’ என்க. சேமம்- காவல்.
வட்டம்-எல்லை.   கொண்டு-நினதாகக்   கொண்டு.  ஆண்ட-அதனை
ஆளுதல்   செய்த.   ‘பூவடி,  மலரடி’  எனத்  தனித்தனி   இயைக்க.
பூ-பொலிவு.   புராணம்-பழைமை.  பூதங்கள்  என்பது   சிவகணங்கள்
என்னும் பொருட்டாய் உயர் திணையாய் நின்றது.


வையகமின் புறநின்ற மருமலிபொற் பதம்போற்றி
கையமரு நிலைபோற்றி கருணைமுக மலர்போற்றி
மெய்யிலகு மொளிபோற்றி விரவியெனை யெடுத்தாண்ட
செய்யதிரு வடிபோற்றி திருச்சிற்றம் பலம்போற்றி.               4  

மன்றின்மணி விளக்கெனலா மருவுமுக நகைபோற்றி
யொன்றியமங் கலநாணி னொளிபோற்றி யுலகும்பர்
சென்றுதொழ வருள் சுரக்குஞ் சிவகாம சுந்தரித
னின்றதிரு நிலைபோற்றி நிலவுதிரு வடிபோற்றி.                 5  

தன்னோங்கு மலரடியுந் தளிரோங்கு சாகைகளு
மின்னோங்கு முகக்கொம்பும் விரவியகண் மலர்களுமாய்
மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபாற்
பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர்கற்
                            பகம்போற்றி.                 6  

தேராட்டிக் கயங்காட்டுந் திரண்மாக்கட் டயமூட்டிப்
போராட்டிப் புறங்காட்டிப் போங்காட்டிற் புலால்கமழு
நீராட்டிச் சூர்மாட்டி நிகழ்நாட்டிற் புகழ்நாட்டும்
பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல்போற்றி.                 7
                                        -கோயிற் புராணம்.