பக்கம் எண் :

22திருவிசைப்பா[ஒன்பதாந்


26.

‘வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
   விசயற் கருள்செய்த வேந்தே ! என்னும்;
‘மறியேறு சாரல் மகேந்திரமா
   மலைமேல் இருந்த மருந்தே என்னும்;
நெறியே ! ’என் னும்; ‘நெறி நின்ற வர்கள்
   நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே ! ’ என் னும்; ‘ குணக் குன்றே! ’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (4)
 

27.

‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல்,
   திரைவீரை, தீங்குழல், சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாட வாடும்
   எனைநீ நலிவதென் ! என்னே ! ’ என்னும் ;
‘அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
   கரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே! ’ என்னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் ;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.            (5)
 

நின்றமை       குறித்து       காளாய்       என்று      கூறினார்.
புளினக்காளை- வேடர்குல    இளைஞன்.    ‘‘வாய்மொழி’’  என்றது,
வேதத்தை. திரு-திருவருள்.

26.     வெறி- செருக்கு.  மறி  ஏறு-மான்  கன்றுகள்  பொருந்திய.
நெறி-வீடுபெறும்  வகை,  சாதனம்.  பின்னர்   வரும், ‘‘குறி’’ என்பது,
இதனால்  எய்தும்  பயன்,  ‘‘நினைக்கின்ற, நீதி’’ என்னும்   இரண்டும்,
ஒருசொல்   தன்மைப்பட்ட   ‘‘வேதாந்த    நிலைக்குறி’’  என்பதனை
விசேடித்தன.  நீதி-எய்தும்  உரிமை. வேதாந்த நிலைக்குறி- வேதத்தின்
முடிநிலையாகிய குறிக்கோள்.

27.     அன்றில்,   துணைபிரியாப்   பறவை.   திங்களைக்காட்டி,
‘‘இத்திங்கள்’’   என்றாள்.   திரை   வீரை- அலைகளையுடைய கடல்.
சே-எருது. தென்றல் முதலியவை காமநோய்  கொண்டாரை வருத்துவன.
பகையாடுதல்-  பகைகொண்டு நிற்றல். அழுந்தா மகேந்திரம்- அழியாத
மகேந்திர  மலை.  ‘‘மகேந்திரத்து’’  என்றதனை,  பின் வரும் தொடர்
ஒருபெயர்த்   தன்மைப்பட்டு   நின்று  முடிக்கும். ‘‘புட்கரசு’’ என்றது,
கலுழனை;   அதற்கு   அரசன்   திருமால்,    ‘‘கொழுந்து’’  என்றது,
‘தலையாயவன்’ என்னும் பொருட்டு.