பக்கம் எண் :

திருமுறை]3. கோயில்25


32.

‘திருநீ றிடாஉருத் தீண்டேன்’ என்னும்;
   திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
   பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்;
‘வருநீ ரருவி மகேந்திரப்பொன்
   மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ ’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (10)
 

33.

‘உற்றாய்! ’ என் னும்; உன்னை யன்றி மற்றொன்
   றுணரேன் ’ என் னும்உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
   பிணிதீர்வெண் ணீறிடப் பெற்றேன்;’ என்னும்;
‘சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
   மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
குற்றாய்!’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (11)
 

விளியேற்று,  ‘சுரவா’ என  நின்றது. சரன்-தேவன்  ‘‘குரவன்’’ என்றது.
‘தந்தை,    தாய்,   அரசன்,   ஆசிரியன்’   என்னும்    அனைத்துப்
பொருளையும் குறிக்கும்.

32.     ‘திருநீறு  இடா  உருத்  தீண்டேன்’  என்றல்,  தில்லைக்
கூத்தப்பெருமானுக்கு   ஆகாதது.   தனக்கும்  ஆகாமை   பற்றியாம்.
‘மெய்யிலும் திருமுண்டத்திலும் தீட்டி’ என்க. முண்டம் -நெற்றி. பூசுதல்
வாளா  பூசுதலும்,  தீட்டுதல்  குழைத்து இடுதலும்  ஆகும். மெய்த்திரு
முண்டத்     திட்டு’    எனவும்    பாடம்    ஓதுப.   திறம் -புகழ்.
பிதற்றுதல்-பித்துக்கொண்டு    பேசுதல்.    இங்கும்   மகேந்திரமலை,
‘பொன்மலை’   எனப்பட்டது.   ‘‘அருளும்’’  என்றது,  ஆகமங்களை
அருளிச்செய்தமையை.     எனவே,     இவளும்    அதுநோக்கியே
காதல்மிக்காளாயினமை பெறப்பட்டது.

33.   உற்றாய்-யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. ‘உணர்வுள்
கலக்கப்பெற்றுப்   பொருந்திய  ஐந்தெழுத்தும்’  என்க.  ‘‘உணர்வுள்’’
என்பது முதலாக, ‘‘பெற்றேன்’’ என்பது ஈறாக  உள்ளவை. தலைவியின்
கூற்றைச்   செவிலி   அங்ஙனமே  கொண்டு   கூறியன. ‘உணர்வுகள்’
என்பது   பாடம்   அன்று.   சுற்று  ஆயசோதி-  சுற்றிலும் வீசுகின்ற
ஒளியையுடைய.  ‘‘மகேந்திரம்’’  என்றது.  இகரம் அலகுபெறாது நிற்க
ஆரியம் போல நின்றது. ‘சூழ’ என்னும் செயவெனெச்சம், தொழிற்