பக்கம் எண் :

திருமுறை]7. திருவிடைக்கழி49


திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
   குழகன்நல் லழகன்நம் கோவே.                  (2)
 

71.

கோவினைப் பவளக் குழமணக் கோலக்
   குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன்
காவனற் சேனை யென்னக்காப் பவன்என்
   பொன்னைமே கலைகவர் வானே
தேவினற் றலைவன் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூருஞ்
   சுப்பிர மண்ணியன் றானே.                     (3)
 


கவர்ந்தமை    பற்றி,   ‘கள்வன்’   என்றாள்;   எனினும்,    இஃது
இகழ்ந்ததன்று; புகழ்ந்து  கூறிய காதற் சொல்லேயாம். திவள்    அம்
மாளிகை -ஒளி வீசுகின்ற அழகிய  மாளிகை.  ‘‘நங்கையாள்’’ என்றது
தலைவியை. நயக்கும்  -  விரும்புகின்ற.   குழகன்   -   இளைஞன்.
‘‘நங்கை யானைக்கும்’’ எனப் பாடம்  ஓதி, அதற்கு,   ‘தெய்வயானை’
என உரைப்பாரும் உளர்.

71.  கோ வினை - தலைமைச் செயல்களையுடைய.  பவளக்குழ -
பவளம்போலும் நிறத்தையுடைய   குழவியாகிய  இவை    இரண்டும்,
‘‘கோழி வெல்கொடியோன்’’ என்பதனோடே  முடியும்.  மணக்கோலக்
குழாங்கள்,தேவருலக மகளிர் குழாங்கள்,இவர்கள் முருகனால்   மாலை
சூட்டப்படுதலை விரும்பி அவனைச் சூழ்ந்து நிற்பர்  என்க.‘‘ஒரு கை
வான் அரமகளிர்க்கு வதுவை  சூட்ட’’
 (117) என்ற திருமுருகாற்றுப்
படையைக் காண்க. காவன் - கற்பகச் சோலையை  யுடைய  இந்திரன்.
‘அவனைச் சூழ்ந்தவரையும் சேனையாகக் கொண்டு  காப்பவன்’ என்க.
இனி,‘அமரரை’ என ஒருசொல் வருவித்து,‘காவல்  நற்சேனையென்னக்
காப்பவன்’ என உரைப்பினும் ஆம். இனி,வேறு உரைப்பாரும்  உளர்.
‘கவர்வானே’    என்றது,   ‘கவர்தல்   பொருந்துவதோ’  என்றவாறு.
‘அமரர்களை  வருந்தாமற் காப்பவன்,என் மகளை  வருந்தச் செய்தல்
பொருந்துமோ’  என்றதாம். ‘‘தே’’ என்பது அஃறிணைச்  சொல்லாய்ப்
பன்மை  குறித்து  நின்றது.  தே  - தெய்வம். தூவி - சிறகு.  பீலி -
தோகை. ‘சுப்பிரமண்ணியன்’ என்றதில் ணகரமெய் விரித்தல்.