136. ஐய பொட்டு-அழகிய திலகம். ‘அளக வாள்நுதல்’ என்பது பாடம் அன்று. சைவம்-சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு அடையாளங்களுள் சடை சிறந்ததொன்றாதலின், ‘‘சைவம் விட்டிட்டசடைகள்’’ என்றார். நடனம் செய்பவர் காலில் சதங்கை அணிதல் இயல்பு என்க. மொய் கொள்-சூழ்தலைக் கொண்ட. ‘‘எண் திக்கின் கண்ணும்’ என உருபு விரிக்க. ‘‘மலர்ந்து’’, ‘‘மொட்டிக்கும்’’ எனச் சினை வினை முதல் மேல் நின்றன. இவ்வாறன்றி, ‘‘தொண்டர்’’ என்றதில் ஆறாவது விரித்து, ‘‘மலர்ந்து’’ என்பது, ‘மலர’ என்பதன் திரிபு என்றலும் ஆம். என்னோ-காரணம் யாதோ. ‘முன்னைத் தவத்தின் பயனாகக் கிடைத்த அன்பே காரணம்’ என்பதாம். கொல், அசைநிலை. 137. ‘‘கங்கைகொண்ட சோளேச்சரத்தானே’’ என்பதை முதலிற்கொள்க. ஏகாரம். தேற்றம். அவன் ஒருவனே பல உருவுமாவன் என்க. சுருதி வானவன்-வேதத்தை ஓதுகின்ற தேவன் ; பிரமன். ‘விசும்பு’’ என்றது சுவர்க்கலோகத்தை ; ‘‘அகல்விசும்பு ளார்கோமான்-இந்திரனே’’ (குறள்-25) என்றது காண்க. பரிதி வானவன்-சூரிய தேவன். படர் சடை முக்கண் பகவன், உருத்திரன்-என்றது சீகண்டரை. அக உயிர்-தன்னை அடைந்த உயிர் ; அவைகட்கு அமுதம்போல அழியா இன்பந்தருவன் என்க. இதனை இறுதியிற் கூட்டி உரைக்க. எருது வாகனன்-இடபாரூட மூர்த்தி. எயில்கள் மூன்று எரித்த சேவகன், திரிபுராந்தக மூர்த்தி. இவையும் சீகண்டர் கொண்ட |