பக்கம் எண் :

90கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


136.

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும்,
   அழகிய விழியும், வெண் ணீறும்,
சைவம்விட் டிட்ட சடைகளும், சடைமேல்
   தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
   முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (4)
 

137.

 சுருதிவா னவனாம் ! திருநெடு மாலாம் !
   சுந்தர விசும்பின் இந்திரனாம் !
பருதிவா னவனாம் ! படர்சடை முக்கட்
   பகவனாம் அகஉயிர்க் கமுதாம் !
 

136.     ஐய பொட்டு-அழகிய திலகம். ‘அளக வாள்நுதல்’ என்பது
பாடம்  அன்று.  சைவம்-சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு
அடையாளங்களுள்     சடை     சிறந்ததொன்றாதலின்,    ‘‘சைவம்
விட்டிட்டசடைகள்’’  என்றார்.  நடனம்  செய்பவர்  காலில்  சதங்கை
அணிதல்  இயல்பு  என்க. மொய் கொள்-சூழ்தலைக் கொண்ட. ‘‘எண்
திக்கின்  கண்ணும்’  என  உருபு விரிக்க. ‘‘மலர்ந்து’’, ‘‘மொட்டிக்கும்’’
எனச் சினை வினை முதல் மேல் நின்றன. இவ்வாறன்றி,  ‘‘தொண்டர்’’
என்றதில்  ஆறாவது  விரித்து,  ‘‘மலர்ந்து’’ என்பது, ‘மலர’ என்பதன்
திரிபு   என்றலும்   ஆம்.  என்னோ-காரணம்  யாதோ.  ‘முன்னைத்
தவத்தின்  பயனாகக்  கிடைத்த அன்பே காரணம்’ என்பதாம். கொல்,
அசைநிலை.

137. ‘‘கங்கைகொண்ட     சோளேச்சரத்தானே’’        என்பதை
முதலிற்கொள்க. ஏகாரம். தேற்றம். அவன் ஒருவனே பல உருவுமாவன்
என்க.  சுருதி  வானவன்-வேதத்தை  ஓதுகின்ற  தேவன்  ;  பிரமன்.
‘விசும்பு’’     என்றது     சுவர்க்கலோகத்தை    ;   ‘‘அகல்விசும்பு
ளார்கோமான்-இந்திரனே’’    (குறள்-25)   என்றது   காண்க.  பரிதி
வானவன்-சூரிய    தேவன்.    படர்    சடை   முக்கண்   பகவன்,
உருத்திரன்-என்றது  சீகண்டரை. அக உயிர்-தன்னை அடைந்த உயிர்
;  அவைகட்கு அமுதம்போல அழியா இன்பந்தருவன் என்க. இதனை
இறுதியிற்   கூட்டி   உரைக்க.  எருது  வாகனன்-இடபாரூட மூர்த்தி.
எயில்கள்  மூன்று  எரித்த  சேவகன், திரிபுராந்தக மூர்த்தி. இவையும்
சீகண்டர் கொண்ட