பக்கம் எண் :

104கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


தழலுமிழ் அரவம் கோவணம் ; பளிங்கு
   சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.                 (3)
 

155.
 

பதிகம்நான் மறை ; தும் புருவும்நா ரதரும்
   பரிவொடு பாடுகாந் தர்ப்பர் ;
கதியெலாம் அரங்கம் ; பிணையல்மூ வுலகில்
   கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
   தமருகம் ; சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் ; கமலவர்த் தனைஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே .                (4) 
 

உணவு.     ‘போர்வை   கரிஉரி,   கவந்திகை திரிந்தூண்’ என  நிரல்
நிறையாகக்  கொள்க.  திரிந்து ஊண்- அலைந்து ஏற்கும் உண்டி. தழல்
உமிழ்-கண்ணால் நெருப்பைச் சிந்துகின்ற ;   என்றது ‘சீற்றத்தையுடைய’
என்றபடி.   பளிங்கு-படிகமணி.    ‘சாட்டியக்குடியார்    ஓம்பு  அழல்,
விளக்கு    என்க.    இழுது    நெய்-வெண்ணெயை    அப்பொழுது
உருக்கிக்கொண்ட  நெய்.  ‘பணிகேட்டுச்  சூழ்பவர்  அயன்  முதலிய
தேவர்களும்,   அறிய   மாட்டாது   ஆய்ந்து   தொடரும்   நூல்கள்
வேதங்களும் ஆகிய பெருமைகள் காணப்படினும், அவன்   உறைவிடம்
சுடுகாடு  முதலியவையாய் உள்ளன ; இஃது அறிதற்கரிதாய்   இருந்தது’
என்றவாறு,  இங்கும்,  ‘உறைவிடம்  கரிகாடு  ;  கோவணம்,  அரவம்;
சபவடம்  பளிங்கு ; விளக்கு அழல்’ என மாற்றுக. ‘‘பளிங்கு’’  என்றது,
மாணிக்கம் முதலிய பிற இரத்தினங்களல்லாமையை உட்கொண்டது.

155.    பதிகம்-(தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர்-கந்தருவர்;
இசை  பாடுவோர்.  கதியெலாம்   அரங்கம்-அவர்  சேரும் இடமாவன
எல்லாம்   அம்பலம்.   பிணையல்   மூவுலகு-மாலைபோல  அமைந்த
மூன்றுலகங்கள்  ‘மூவுலகிலும்’  என   உம்மை  விரித்து,  ‘மூவுலகிலும்
ஒலிசெயும்’     என       முடிக்க,        சதியில்-அடிபெயர்த்தலில்,
ஆர்கலியில்-கடலைப்போல.   ‘ஆர்கதியில்’  என்பது பாடம் ஆகாமை
யறிக.  கமல  வர்த்தனை-பதுமநிதி.    உள்ளத்தில் உள்ள அன்பையே
தாம்   விரும்பும்  பொருளாகக்   கொள்ளுதலின்,  சாட்டியக்குடியாரது
இதயங்களை  இவ்வாறு  கூறினார்.    ‘வர்த்தனை  ஆசனம் ’ எனவும்
உரைப்பர்.