பக்கம் எண் :

118கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

தந்திரி வீணை கீதமுன் பாடச்
   சாதிகின் னரங்கலந் தொலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
   மருவிடந் திருவிடை மருதே.                   (2)
 

175.

பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
   பல்லவம் வல்லியென் றிங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
   வீங்குல கொழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமக ளுடனாய்த்
   தூங்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன்
   மருவிடந் திருவிடை மருதே.                   (3)
 

‘‘அடிகள்’’   என்ற உயர்வுச் சொல்லும் இங்கு    நகைப்பொருட்டாயே
நின்றது.  தந்திரி    வீணை- நரம்புகளையுடைய வீணை. சாதி-உயர்ந்த,
கின்னரம்-யாழ்  ; என்றது அதன்   இசையை. வீணை முற்பட்டுப் பாட.
யாழிசை  அதனோடு  ஒன்றி ஒலிக்கின்றது’  என்பதாம். ‘கீதமும் பாட’
என்பது    பாடம்    அன்று.    ‘‘வீணை    பாட’’   என,   கருவி
வினைமுதல்போலக் கூறப்பட்டது.

175.     பனி படு மதி-குளிர்ச்சி   பொருந்திய சந்திரன் ;  என்றது
பிறையை.   கொழுந்து-குருத்து.  அன்ன  பல்லவம்- அவற்றோடொத்த
தளிர்.   வல்லி-கொடி.   என்று   இங்ஙன்  வினைபடு   கனகம்போல
யாவையுமாய்-ஆகிய     இன்னோரன்ன     பொருள்      வடிவாகச்
செய்யப்படுகின்ற  பொன்போல  எல்லாப்   பொருள்களுமாய்  என்றது,
‘பொன்  ஒன்றே  பல  பொருள்களாய் நிற்றல்போலத் தான்  ஒருவனே
எல்லாப்  பொருளுமாய்  நிற்கின்றான்’  என்றவாறு.  இது   பரிணாமம்
கூறியதன்று  ; கலப்புப் பற்றியே கூறியது.   தூங்கு இருள்-மிக்க இருள்.
‘‘நடுநல்யாமத்து’’  எனக்  களவிற்  கலக்கப்பட்ட  தலைவியது  கூற்றுப்
போலக்  கூறினார். ‘யாவரும் அறியாதவாறும்,  யானும் அறியாதவாறும்
என் மனத்திடை அணுகினான்’ என்பது உண்மைப் பொருள்.