திருச்சிற்றம்பலம்
படுதலும், அந்நடனத்தை இவர் முதற்கண் திருமாலின் இதயத்தில் இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க. 184. ‘‘தேவர்காள்’’ என்பதனை முதலிற்கொண்டு, அதன் பின்னர்ப் பின்னிரண்டடிகளைக் கூட்டியுரைக்க. ‘உணர்வோர் பருகுதோறு’ என இயையும். ‘வாய்மடுத்துப் பருகுதல், என்பது பான்மை வழக்கு. ‘‘அவர்க்கே’’ என்ற பிரிநிலை ஏகாரம், பிறர்க்குத் தித்தியாமை குறித்து நின்றது. தித்தியா-தித்தித்து. இருந்தவா-இருந்தவாற்றை. தேவர்களை நோக்கிக் கூறினார். ‘யாம் திவ்விய தேகமும் (ஒளியுடம்பு) உடையோம்; அதனால் தேவராய் நிற்கின்றோம் எனச் செருக்குகின்ற உங்கள் உருவத்தின் ஒளி இவரது திருவுருவத்தின் ஒளிக்கு எட்டுணையேனும் போதாமையைக் கண்டு அடங்குமின்கள்’ என்றற்கு. இனி வருவன அத்திருவுருவத்தின் பெருமைகள். சத்தியாய்-அம்மையாய். சிவமாய்-அப்பனாய், தனிமுழு முதலாய்-அவ்வாறு நிற்றலானே உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய், அதற்கு ஓர் வித்துமாய்-தம்மால் படைக்கப்பட்ட அவ்வுலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய்.
வியாக்கிரபாதச் சருக்கம் மன்னுமருந் தபோதனரின் மருவியமத் தியந்தினனா முன்னரிய திருமுனிபா லோங்குலகந் துயர்நீங்கப் பன்னரிய சிவஞானம் பத்திதரும் பான்மைதகத் தன்னிகரி றிருவருளா லவதரித்தா னொருதனயன். 1 _ கோயிற் புராணம் |