பக்கம் எண் :

திருமுறை]20. கோயில்135



 

சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
   அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
   காண்பதும் என்றுகொலோ !                   (6)
 

201.

இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
   இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
   வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
   செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
  காண்பதும் என்றுகொலோ.                     (7)
 

கோயிற்   புராண வரலாறு. ‘‘பதஞ்சலிக் கருளிய பரமநாடக’’ என்று
அருளிச்செய்தார்  திருவாசகத்தும்     (கீர்த்தி-138.) கண்டன்-தலைவன்,
‘கண்டு  அன்னாரை’  எனப் பிரித்து  உரைத்தலுமாம்; இஃது ஒருமைப்
பன்மை மயக்கம்.

201.    ‘‘மலைதான் எடுத்த’’ என்பதை முதலிற் கூட்டுக. இற-முரிய.
‘இறச்   செய்து’  என  ஒருசொல்  வருவிக்க   ‘மறக்கருணையின்பின்
அறக்கருணை  செய்தமையைக்குறித்தலின், மற்று,   வினைமாற்றின்கண்
வந்தது.   நாள்-நீண்ட   வாழ்நாள்.   சிவபெருமான்   இராவணனுக்கு
வாளொடு நாள்கொடுத்தமையை,

‘‘எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
   துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
   கோல வாளொடு  நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
   செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.’’

என்னுசுந்தரர்திருமொழியானும்        (திருப்பதிகம்-55.9.)      அறிக.
கலையார்  மறிபொற் கையினான் என்பது   ‘‘ஒருபெயர்த் தன்மைத்தாய்
நின்று   ‘‘அம்பலத்து’’  என்பதற்கு    முடிபாயிற்று. கலை-ஆண்மான்;
மறி-கன்று  (குட்டி).  ‘கலை  மறி  ஆர்  கையினான்’   என  மாற்றிப்
பொருள் கொள்க. பொன்-அழகு.