பக்கம் எண் :

162திருவாலியமுதனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


243.

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால்
   அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல்
   ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப்
   பரமன் ஆடுமே.                             (8)
 

244.

மாலோ டயனும்அமரர் பதியும்
   வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
   என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
   பரமன் ஆடுமே.                             (9)
 

245.

நெடிய சமணும் மறைசாக் கியரும்
   நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
 


சந்திரன்’   என  உரைக்க.  கொத்து  ஆர்-கொத்தாகப்  பொருந்திய.
கொத்து, பூங்கொத்துமாம். குழகன்-அழகன்.

243. அதிர்த்த-ஆரவாரம்   செய்த; (உமையை) ‘அஞ்சப் பண்ணிய’
என்றுமாம்.  அரக்கன்-இராவணன்.  அடர்த்தாய்-  துன்புறுத்தினவனே.
உதித்த  போழ்தில் விளங்கும் இரவி’ என ஒருசொல் வருவிக்க. ‘மணி,
மாணிக்கம்’ என்பது வெளிப்படை, தலம்-நிலம்.

244. அமரர்    பதி-தேவர்கள் தலைவன்; இந்திரன், ஆலம்-நஞ்சு.
’ஆலா  கண்டா’ எனப்  பாடம்  ஓதி,  ‘ஆலால’  என்பது  குறைந்து
நின்றதாக உரைப்பினும் இழுக்கில்லை. ‘‘அவர்’’ என மீட்டும்  கூறியது,
அவரது  பெருமை  குறித்து.  ‘‘மல்கு சிற்றம்பலம்’’ என்பது  முன்னும்
வந்தது  (6).  பால் ஆடும்-சுற்றிலும் சுழன்றாடுகின்ற. ‘பாலாடும் சடை’
என இயையும். ‘பாலாடும் முடி’ என்று இயைத்து, ‘பாலில்  மூழ்குகின்ற
சென்னி’ எனவும் உரைப்பர். தாழ-நீண்டு விளங்க.