|
30
|
|
பேரருட்
கூடற் பெரும்பதி நிறைந்த
முக்கட் கடவுண் முதல்வனை வணங்கார்
தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவுந்
துறவா லறனாற் பெரலின் மாந்தர்
விள்ளா வறிவி னுள்ளமு மென்னவுஞ் |
|
|
|
செக்கர்த்
தீயொடு புக்கநன் மாலை
யென்னுயிர் வளைந்த தோற்றம் போல
நாற்படை வேந்தன் பாசறை
யோர்க்கு முளையோ மனத்திற னேதுவாகவே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று
துறை: பொழுதுகண்டு
மயங்கல்.
(இ-ம்.)
இதனை, அவனறிவாற்ற வறியுமாகலின் (தொல். கற்பி,6) எனவரும் நூற்பாவின்கண் இன்பமும்
இடும்பையுமாகிய விடத்தும் என்புழி இடும்பை ஆகியவிடத்தும் என்னும் விதிகொள்க.
இனி அகத்திணையியலின்கண் எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே (தொல்-42) எனவரும்
நூற்பாவினால் அமைப்பினுமாம்.
1-2:
கோடிய................................புக
(இ-ள்)
கோடிய கோலினன் செருமுகம் போல-வளைந்த கோலையுடைய அரசன் போர்க்களத்தே தோற்றுவீழுமாறு
போலே; கனைகதிர்-நெருங்கிய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலம்; திருகிக்கல்சேர்ந்து
முறைபுக-மாறுபட்டு மறைமலையினைஎய்தி முறையே கடலின்கண் வீழாநிற்பவும் என்க.
(வி-ம்.)
கோடியகோல்-கொடுங்கோல். கொடுங்கோல் மன்னன் பகைப்புறத்தே தோற்றுவீழல் ஒருதலையாகலின்
ஒளி மழுங்கிக் கடலில் விழும் ஞாயிற்றுக்கு உவமை எடுத்தார். செரு முகம்-போர்க்களம்.
போர்க்களத்தில் வீழுமாறுபோலே என்க. கனைகதிர்: அன்மொழித்தொகை. திருகுதல்-மாறுபடுதல்.
கல்-மலை என்றது கதிரவன் மறையும் மலையினை.
3-4:
பதினெண்...............................கொள்ள
(இ-ள்)
புள்குளம்-பறவைக்கூட்டங்கள்; பதினெண் கிளவி ஊர்துஞ்சிய போல்-பதினெட்டுவகை மொழிகளும்
பேசப்படும் பேரூரின்கண்ணே அம்மொழிகள் அவிந்து மாந்தர் உறங்கினாற்போல; பொய்கைவாய்
தாழ்க்கொள்ள-தாழ்வாழும் நீர்நிலையிடத்தே ஆரவாரமடங்கித் தங்குதலைச் செய்யா
நிற்பவும் என்க.
|