பக்கம் எண் :

மூலமும் உரையும்309



30
  பேரருட் கூடற் பெரும்பதி நிறைந்த
முக்கட் கடவுண் முதல்வனை வணங்கார்
தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவுந்
துறவா லறனாற் பெரலின் மாந்தர்
விள்ளா வறிவி னுள்ளமு மென்னவுஞ்
  செக்கர்த் தீயொடு புக்கநன் மாலை
யென்னுயிர் வளைந்த தோற்றம் போல
நாற்படை வேந்தன் பாசறை
யோர்க்கு முளையோ மனத்திற னேதுவாகவே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று

துறை: பொழுதுகண்டு மயங்கல்.

     (இ-ம்.) இதனை, “அவனறிவாற்ற வறியுமாகலின்” (தொல். கற்பி,6) எனவரும் நூற்பாவின்கண் ‘இன்பமும் இடும்பையுமாகிய விடத்தும்’ என்புழி “இடும்பை ஆகியவிடத்தும்” என்னும் விதிகொள்க. இனி அகத்திணையியலின்கண் “எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே” (தொல்-42) எனவரும் நூற்பாவினால் அமைப்பினுமாம்.

1-2: கோடிய................................புக

     (இ-ள்) கோடிய கோலினன் செருமுகம் போல-வளைந்த கோலையுடைய அரசன் போர்க்களத்தே தோற்றுவீழுமாறு போலே; கனைகதிர்-நெருங்கிய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலம்; திருகிக்கல்சேர்ந்து முறைபுக-மாறுபட்டு மறைமலையினைஎய்தி முறையே கடலின்கண் வீழாநிற்பவும் என்க.

     (வி-ம்.) கோடியகோல்-கொடுங்கோல். கொடுங்கோல் மன்னன் பகைப்புறத்தே தோற்றுவீழல் ஒருதலையாகலின் ஒளி மழுங்கிக் கடலில் விழும் ஞாயிற்றுக்கு உவமை எடுத்தார். செரு முகம்-போர்க்களம். போர்க்களத்தில் வீழுமாறுபோலே என்க. கனைகதிர்: அன்மொழித்தொகை. திருகுதல்-மாறுபடுதல். கல்-மலை என்றது கதிரவன் மறையும் மலையினை.

3-4: பதினெண்...............................கொள்ள

     (இ-ள்) புள்குளம்-பறவைக்கூட்டங்கள்; பதினெண் கிளவி ஊர்துஞ்சிய போல்-பதினெட்டுவகை மொழிகளும் பேசப்படும் பேரூரின்கண்ணே அம்மொழிகள் அவிந்து மாந்தர் உறங்கினாற்போல; பொய்கைவாய் தாழ்க்கொள்ள-தாழ்வாழும் நீர்நிலையிடத்தே ஆரவாரமடங்கித் தங்குதலைச் செய்யா நிற்பவும் என்க.