|
35
|
|
மிடைந்துவயல்
திரிந்து முதுகுசரிந் துடைந்து
சிறியோன் செருவென முறியப் போகி
யுழவக் கணத்தைக் குலைக்குடி புகுத்தும் |
|
|
|
பெருநீ
ரூரர் நிறைநீர் விடுத்துச்
செறிந்த தென்னெனக் கேட்டி
மறிந்துழை விழித்த மறிநோக் கினளே. |
(உரை)
கைகோள் : கற்பு தலைவி கூட்று
துறை: புனலாட்டுவித்தமை
கூறிப் புலத்தல்
(இ-ம்.)
இதனை "அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின்" (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்
'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்' என்பதன்கண் அமைத்துக்கொள்க.
38:
மறிந்து . . . . . . . . . . நோக்கிளளே
(இ-ள்)
மறிந்துழை விழித்த மறிநோக்கினளே - வெட்டுவரால் மறிக்கப்பட்ட இடத்தே அலமந்து
விழிக்கின்ற மானினது பார்வைபோன்ற பார்வையினையுடைய தோழியே! என்க.
(வி-ம்.)
மறிந்தஉழை என்பது மறிந்துழை என நிலைமொழி ஈற்றகரம் தெக்கது. மறிந்த - மறிபட்ட.
இது தலைவி தோழியை விளித்து. தலைவன் வருகை கண்டு தோழி அவனை அலமந்து நோக்குதலின்
இங்ஙனம் விளித்தாள் என்க.
24
- 29: பாசடைக் . . . . . . . . . . துவைப்ப
(இ-ள்)
சுழல் மணம் பாசடை குவளைக் காட்டினை - சுழலாகின்ற நறுமணத்தையுடைய பசிய இலைகளையுடைய
குவளைமலர்க் கூட்டத்தினை; கருவரி செங்கண் வரால் இனம் கலக்ககரிய கோடுகளையும் சிவந்த
கண்களையுமுடைய வரால்மீன் கூட்டம் பாய்ந்து கலக்காநிற்பவும்; முண்டகத்து எரிஅலர்
அடவி- தாமரைகளின் தீப்போன்று மலர்கின்ற மலர்க்கூட்டங்களை; தீக்கு எறிய வெள்உடல்
கருங்கண் கயல்நிலை உகைப்ப - திசைதொறும் சிந்தும்படி வெள்ளிய உடலையும் கரிய கண்ணையுமுடைய
சேல்மீன் கூட்டம் பாய்நது சிதைப்பவும்; மரகதப் பன்னத்து ஆம்பலங் குப்பையை - மரகதமணி
போன்ற நிறமுடைய இலைகளையுடைய ஆம்பல்மலர்க் கூட்டத்தை; சொரி எயிறு பேழ்வாய் வாளைகள்
துவைப்ப - சொரிந்து வைத்தாலொத்த பற்களையும் பெரிய வாயையுமுடைய வாளை மீன்கள்
பாய்ந்து துவைப்பவும் என்க.
|