பக்கம் எண் :

414கல்லாடம்[செய்யுள்54]



35
  மிடைந்துவயல் திரிந்து முதுகுசரிந் துடைந்து
சிறியோன் செருவென முறியப் போகி
யுழவக் கணத்தைக் குலைக்குடி புகுத்தும்
  பெருநீ ரூரர் நிறைநீர் விடுத்துச்
செறிந்த தென்னெனக் கேட்டி
மறிந்துழை விழித்த மறிநோக் கினளே.

(உரை)
கைகோள் : கற்பு தலைவி கூட்று

துறை: புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

     (இ-ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின்" (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் 'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்' என்பதன்கண் அமைத்துக்கொள்க.

38: மறிந்து . . . . . . . . . . நோக்கிளளே

     (இ-ள்) மறிந்துழை விழித்த மறிநோக்கினளே - வெட்டுவரால் மறிக்கப்பட்ட இடத்தே அலமந்து விழிக்கின்ற மானினது பார்வைபோன்ற பார்வையினையுடைய தோழியே! என்க.

     (வி-ம்.) மறிந்தஉழை என்பது மறிந்துழை என நிலைமொழி ஈற்றகரம் தெக்கது. மறிந்த - மறிபட்ட. இது தலைவி தோழியை விளித்து. தலைவன் வருகை கண்டு தோழி அவனை அலமந்து நோக்குதலின் இங்ஙனம் விளித்தாள் என்க.

24 - 29: பாசடைக் . . . . . . . . . . துவைப்ப

     (இ-ள்) சுழல் மணம் பாசடை குவளைக் காட்டினை - சுழலாகின்ற நறுமணத்தையுடைய பசிய இலைகளையுடைய குவளைமலர்க் கூட்டத்தினை; கருவரி செங்கண் வரால் இனம் கலக்ககரிய கோடுகளையும் சிவந்த கண்களையுமுடைய வரால்மீன் கூட்டம் பாய்ந்து கலக்காநிற்பவும்; முண்டகத்து எரிஅலர் அடவி- தாமரைகளின் தீப்போன்று மலர்கின்ற மலர்க்கூட்டங்களை; தீக்கு எறிய வெள்உடல் கருங்கண் கயல்நிலை உகைப்ப - திசைதொறும் சிந்தும்படி வெள்ளிய உடலையும் கரிய கண்ணையுமுடைய சேல்மீன் கூட்டம் பாய்நது சிதைப்பவும்; மரகதப் பன்னத்து ஆம்பலங் குப்பையை - மரகதமணி போன்ற நிறமுடைய இலைகளையுடைய ஆம்பல்மலர்க் கூட்டத்தை; சொரி எயிறு பேழ்வாய் வாளைகள் துவைப்ப - சொரிந்து வைத்தாலொத்த பற்களையும் பெரிய வாயையுமுடைய வாளை மீன்கள் பாய்ந்து துவைப்பவும் என்க.