பக்கம் எண் :

மூலமும் உரையும்475



  மெறிதிரைப் பழனக் கூடற்
செறிகவின் றம்ம திருவொடும் பொலிந்தே.

(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று

துறை: வழிப்படுத்துரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு "தலைவரும் விழுமம்" (தொல்.) எனவரும் நூற்பாவின்கண் 'விடுத்தற் கண்ணும்' எனவரும் விதி கொள்க.

1 - 5: செங்கோல்................................. குடிகள்

     (இ-ள்) செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய - செங்கோலாகிய திருமகளுடனே அரசியல் நூலை ஆராய்ந்து தெளிந்து அரசியலறத்தை வளர்த்த; மறுபுல வேந்தன் - வேற்று நாட்டரசனது; உறுபடை எதிர்ந்த கொடுங்கோல் கொற்றவன் -பெரிய படைகளால் தாக்கப்பட்ட கொடுங்கோலரசனுடைய; நெடும்படை அனைத்தும் சேரவறந்த - அளவிறந்த படைகள் முழுவதும் ஒருசேர அழிந்துபட்ட; திருத்தகு நாளில் - நன்மை பயக்கும் நாளின்கண்; அவன் - அக்கொடுங்கோலரசனுடைய; பழிநாட்டு நடுங்கும் நல்குடிகள் - பழிபட்ட நாட்டின்கண் வாழுகின்ற துன்புற்று நடுங்கிய நல்ல குடிமக்கள் என்க.

     (வி-ம்.) செங்கோல் - செங்கோன்மை. அஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோலெனப்பட்டது. வடநூலாரும் தண்டமென்றோர். திரு-திருமகள்; செல்வமுமாம். அரசனுக்குச் செங்கோன்மையிற் சிறந்த செல்வம் பிறிதின்மையின் அதனைத் திரு என்றார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" எனவரும் திருக்குறளையும் (குறள்) நோக்குக. தெளிந்து என்பது அரசியல் நூல் முறைகளைத் தெளிந்து என்றவாறு. அறம் - அரசியலறம். மறுபுலம் - வேற்று நாடு. உறுபடை என்புழி உறு மிகுதிப்பொருட்டாய் உரிச்சொல். கொங்கோற் கொற்றவன் என்புழிக் கொற்றவன் என்பது இகழ்ச்சி. கொடுங்கோல்-செங்கோன்மையின் மறுதலை. இது வளைந்தகோல் போறலின் கொடுங்கோல் எனப்பட்டது. வறந்த - அழிந்துபட்ட. கொடுங்கோல் மன்னவன் இறந்த நாள் நாட்டிற்கு நன்மை தொடங்கு நாளாதலின் அதனைத் தருத்தகு நான் என்றார்.

6 - 9: கண்ணொடு...........................அடக்கி

     (இ-ள்) கண்ணொடு கண்ணில் கழறியபோல - மாந்தர் அச்சத்தால் வாய்விட்டுச் சொல்லாமல் பிறர் கண்களோடு தம்