பக்கம் எண் :

மூலமும் உரையும்481



  பெருமுகில் வயிறள வூட்டித்
திருவுல களிக்குங் கடன்மட மகளே,

(உரை)
கைகோள் : களவு, தோழிகூற்று

துறை : கடலிடைவைத்துத் துயரறிவித்தல்

     (இ-ம்.) இதற்கு “நாற்றமுந் தோற்றமும்” (தொல். கள. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘புணர்ச்சி வேண்டினும்’ எனவரும் விதிகொள்க,

26-31: நன்கமர் .................................. மகளே

     (இ-ள்) நன்கு அமர் பவளவாயும்-கண்டோர் மிகவும் விரும்புதற்குக் காரணமான பவளமாகிய வாயும் ; கிளர் பச்சுடம்பும்-ஒளிவீசும் பச்சையுடம்பும் ; நெடுங்கயல் விழியும் - நெடிய கயல்மீனாகிய கண்ணும் ; நிறைமலை முலையும் - அழகு நிறைந்த மலையாகிய முலைகளும், மாசுஅறப் படைத்து - குற்றமறப் பெற்று ; மணியுடன் - முத்து முதலிய மணிகளுடனே ; நிறத்த பெருமுகில் வயிறு அளவு ஊட்டி - நன்றித்தையுடைய பெரிய முகில்களை வயிறு கொள்ளுமளவு நீராகிய அமுதத்தை ஊட்டி ; திரு உலகு அளிக்கும் கடல் மடமகளே - செல்வத்தை உலகத்திற்கு வழங்கா நின்ற கடலாகிய மடப்பமுடைய பெண்ணே கேள் ! என்க,

     (வி-ம்.) அமர் - விரும்புகின்ற பச்சுடம்பு - பச்சை நிறமான உடம்பு. அழகு நிறைந்த மலை என்க, மணி - முத்து முதலியன - வயிறு அளவு - வயிறு கொள்ளுமளவு. அளித்தல் - வழங்குதல். மடமகள் - இளமகளுமாம்.

1-7 : இருநிலம் ................................... ஆகலின்

     (இ-ள்) இருநிலம் தாங்கிய - பெரிய நிலவுலகத்தைத் தாங்குதற்குக் காரணமான ; வலிகெழு நோன்மை பொன்முடிச் சயிலக் கணவன் புணர்ந்து- வலிமை பொருந்திய பொறையையுடைய பொன்முடியையுடைய மந்தரமலையாகிய கணவனைக்கூடி ; திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் மதி எனும் மகவும் - திருமகளாகிய பெண்ணையும் அமுதமாகிய மகவினையும் திங்களாகிய மகவினையும் ; மலர்உலகு அறிய - பரந்த உலகிலுள்ளோர் அறியும்படி ; கண்ணொடு முத்தங் கலுழ்ந்து - கண்ணில் முத்துக்களாகிய கண்ணீரைச் சொரிந்து ; உடல் கலங்கி வாய்விட்டு அலறி - உடம்பு நொந்து வாய்திறந்தழுது ; வயிறு நொந்து ஈன்ற - கருவுயிர்த்தல் துன்பம் எய்திப் பெற்ற