|
சென்றாற்போல என்பது
கருத்து. தலைவி தலைவன் ஒருவனையே விரும்பி ஈண்டுத் தோழியோடு பண்டு நுகர்ந்திருந்த
இன்பங்கள் அனைத்தையும் துறந்து போனாள் என்பது கருத்து.
44: மருங்கு........................................விட்டு
(இ-ள்) பின் மருங்கு
நோக்காது ஒருங்கு விட்டு அகல-அவள் தன் பின் புறத்தையும் பக்கத்தையும் நோக்காமல்
எம்மோடு ஒருங்கஎ விட்டு நீங்குதற்கு என்க.
(வி-ம்.) பின் மருங்கு
நோக்காது என மாறுக. பின் நோக்குதலாவது சிந்தனையால் பின் புறத்தே நோக்கி நற்றாய்
முதலியோரை நினைவு கூர்தல். மருங்கு நோக்குதலாவது தன் பக்கத்தே கண்ணல் நோக்குதல்.
அங்ஙனம் நோக்குழித் தன் நிழல்போல எப்பொழுதும் இருக்கின்ற தோழியைக் காணுவள்.
கண்டக்கால் அவளைப் பிரிந்து போதல் இயலாது. ஆகவே அவள் பிரியுங்கால் பின்னும்
மருங்கும் நோக்காமலே பிறிந்தனள் என அவள் வன்கண்மையை வியந்தபடியாம்.
44-46:
அகல.............................................எடுத்தே
(இ-ள்) ஒருவன் அன்பு
எடுத்து-பிறள் மகன் ஒருவன் காட்டிய ந்பை மேற்கொண்டு; அருந்தழல் சுரத்தில்-பொருத்தற்கரிய
தீயையொத்த பாலை நிலத்தின் கண்ணே; அகல உள்ளம் பொருந்தியது எப்படி-செல்ல அவள்
நெஞ்சம் ஒருமித்தது எங்ஙனம் ஆற்றுவேன்? என்க.
(வி-ம்.)
மடந்தை என்னை நீங்கினும் நீங்குக. ஆயத்தை நீங்கினும் நீங்குக. செவிலியைப் பிரிகினும்
பிரிக, நாகணவாய்ப்புள் முதலியவற்றின் இன்பத்தை இழப்பினும் இழக்க; உயிரொன்றாகிய
இத்த்ழியைப் பிரிதற்கு எப்படித்தான் துணிந்தனளோ? என்று வியந்தவாறு. இனி யான்
எங்ஙனம் ஆற்றுகேன் என்பது குறிப்பெச்சம். அவள் பிரியலாகாமைக்கு மற்றுமோர் ஏதுக்
கூறுவாள் அருந்தழற் சுரத்தில் அகல என்றாள். ஒருவன் என்றது பிறள்மகன் ஒருவன் என்பது
பட நின்றது.
இனி
இதன்கண் என்னையும் ஒருவுக என்றது, தன்னைக் குறித்துக் கூறியது. அருந்தழற் சுரத்தில்
என்றது, அச்சம் சார்தல் என்க, கருந்தலை.............இழக்குக என்றது, யாம் இவற்றைக்
கண்டு வருந்த இவற்றை எமக்கு ஒழித்து நீரிலா ஆரிடைப் போயினள் என்றவாறு. தோழி
தேஎத்தும் எனப் பொதுப்படக் கூறியதனால் செவிலி முதலியோரைக் குறித்துக் கூறினமையும்
கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|