“-ஊற்றுமெய் அன்புமிகுந்தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் இன்பமிகுஞான இலக்கணமே.” (அருட்பா) “சிந்தை நின்றசிவாநந்தச் செல்வமே எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே வலிதாயத்தலைவநீ கந்தைசுற்றுங் கணக்கது என்கொலோ” (பழம் பாடல்) அஞ்சல் முகவரி :- அ/மி. வல்லீஸ்வர சுவாமி திருக்கோயில் பாடி, சென்னை - 600 050. 22. (வட) திருமுல்லைவாயில் திருமுல்லைவாயில் | தொண்டை நாட்டுத் தலம். சென்னைக்கு அருகில் உள்ளது. சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் எனப்படுகிறது. (1) சென்னை- ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. (2) பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயில் அடையலாம். சாலையில் இறங்கி ஊருள் 1 கி.மீ. சென்று கோயிலை அடையலாம். தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் பெயருடையது. இத்தலம் பற்றிய வரலாறு : இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் |