சனிபகவான் துதி “பெருவாச நளனொடு வந்தவன் தீர்த்தமாடுதலாற் பெற்றபேற்றால் ஒருவா வந்தெம் பெருமானருள் பெற்று மிகவுமனம் உவகைபூப்பக் கருவாசல் புக்கார்போல் புகுந்தொளிரு நள்ளாற்றுக் கனக வச்ரத் திருவாசலிடனின்ற “மந்தன்” இரு செந்தளிர்த்தாள் சிந்தை செய்வாம்.” (தலபுராணம்) - “இருமையினும் எள்ளாற்றின் மேவாத வேற்புடையோர் சூழ்ந்திறைஞ்சும் நள்ளாற்றின் மேவிய என் நற்றுணையே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு & அஞ்சல் - 609 607 (வழி) மயிலாடுதுறை, காரைக்கால்.
170/53. கோட்டாறு. கொட்டாரம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் இவ்வூர் ‘கொட்டாரம்’ என்று வழங்கப்படுகிறது. 1) காரைக்கால் - கும்பகோணம் சாலையில் திருநள்ளாறு தாண்டி, அம்பகரத்தூர் சென்று, காளிகோயிலை அடைந்து ; அவ்விடத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதை வழியாக - வயல் வழியாக 2 கி.மீ. நடந்து சென்று இக்கோயிலை அடையலாம். 2) கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாகத் திருநள்ளாற்றுக்குப் போகும் மயிலாடுதுறை - காரைக்கால், கும்பகோணம் - காரைக்கால் பேருந்துகளில் சென்று ‘கொட்டாரம் கூட்ரோடில்’ இறங்கி 1 கி.மீ. நடந்து இவ்வூரை (இக்கோயிலை) அடையலாம். |