“மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரைநுதல்கரம் ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர் அத்தகவடி தொழ அருள்பெறுகண்ணொடும் உமையவள் வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.” (சம்பந்தர்) “ -திண்மைக் களமர் மகிழக் கடைசியர் பாடும் விளமர் கொளும் எம் விருப்பே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் விளமல் & அஞ்சல் (வழி) திருவாரூர் (வடக்கு) S.O. 610 002. திருவாரூர் மாவட்டம். 208/91. கரவீரம் கரையபுரம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் கரையபுரம் என்று வழங்குகின்றனர். (1) திருவாரூர் - கும்பகோணம் சாலையில் ‘வடகண்டம்’ என்னும் ஊரையடுத்து ‘கரையபுரம்’ என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோயிலை யடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். வெட்டாற்றின் கரையிலுள்ளது. கரவீரம் - பொன்அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. கௌதமர் பூசித்ததலம். திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயில். இறைவன் - கரவீரேஸ்வரர் இறைவி - பிரத்யக்ஷமின்னம்மை தலமரம் - அலரி தீர்த்தம் - அனவரத தீர்த்தம். |