பாண்டிய நாட்டுத் தலம். நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை திருநெல்வேலியிலிருந்தும் பேருந்துகள் குற்றாலம் வழியாகச் செங்கோட்டை செல்கின்றன. (1) சென்னை - கொல்லம் மெயிலில் (2) சென்னை - செங்கோட்டை பாசஞ்சரில், சென்று செங்கோட்டையில் இறங்கி அங்கிருந்தும் பேருந்தில் வரலாம். இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :- திரிகூடாசலம், திரிகூடமலை என்பன. |