37. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே - (1293) பெரிய திருமொழி 4-5-6 |
என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
திருநாங்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது.
திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற
அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
மூலவர்
வரதராஜப்பெருமாள் (கஜேந்திரவரதன்) மணிக்கூட நாயகன் என்றும்
சொல்வர். கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்
திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) பூ தேவி
தீர்த்தம்
சந்திர புஷ்கரணி
விமானம்
கனகவிமானம்
காட்சி கண்டவர்கள்
பெரிய திருவடி, சந்திரன்