பக்கம் எண் :

326

53. திருக்கார் வானம்

     நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
          நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்தகச்சி
     ஊரகத்தாய் ஒண்துறைநீர் வெஃகாவுள்ளாய்
          உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
     காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
          காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
     பேரகத்தாய் பேரா தென் நெஞ்சினுள்ளாய்
          பெருமானுன் திருவடியே பேணினேனே
                 (2059) - திருநெடுந்தாண்டகம் -8

     என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திவ்ய
தேசம் உலகளந்த பெருமாள் சன்னதியாகிய திருவூரகத்தினுள்ளேயே
இருக்கிறது. திருக்கார் வானம் எவ்விடத்து இருந்தது என்பதை
அறியுமாறில்லை. இதுவும் ஆய்வுக்குரிய விஷயமாகும். அதே போன்று
திருக்கார்வானம் என்னும் சொல்லும் புதிதாகும். கார்மேகத்தான் என்று
எம்பெருமானுக்குப் பெயருண்டு. ஆனால் கார்வானத்தான் என்றுண்டோ.
உண்டு. நம் தெய்வத் தீந்தமிழில் அவனுக்கு கார்வானத்தான் என்றும்
திருப்பெயர், ஆழ்வாரின் அமுதவாக்கிலிருந்து வந்திருக்கிறது.

     கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின்
பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற
இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது. நீரகத்தாய் என்றும், காரகத்தாய்
என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை இந்த
திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது மட்டும் எம்பெருமானின்
பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.

     திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால்
அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இந்தக்
கார்வானத்து எம்பெருமானுக்குத்தான் கள்வர் என்றும் திருநாமமாகும்.
கார்வானத்துள்ளாய் கள்வா என்னும் மங்களாசாசனத்தால் கார்வானம் என்னும்