பிற்சேர்க்கை 1. கோவிலில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் 1. நீராடாமலும், கை, கால்களை, சுத்தி செய்யாமலும், சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது. 2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும். 3. விளக்கேற்றும் போதும், விளக்கில்லாதபோதும் செல்லக் கூடாது. 4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், எம்பெருமானின் நைவேத்யத்தை மூடாமலும் வைக்கக்கூடாது. 5. வேறு காரியத்திற்கு வாங்கிய பொருளை பெருமானுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. 6. நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது. 7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது. 8. கோவிலுக்குள் குப்பை கூளம் இடலாகாது. 9. கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்கள் உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது. 10. துளசியையும், மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாகாது. 11. தரிசனம் முடிந்து திரும்பும்போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது. 12. கோவிலுக்குள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது. 13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம், பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது. 14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும். 15. ஆமணக்கு எண்ணெயை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது. |