பக்கம் எண் :

72

7. திருக்கண்டியூர்

     பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும்
          உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர், உலகமேத்தும்
     கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று
          மண்டினார் குயலல்லால் மற்றையோர்க்குய்யாலாமே (2050
                                 திருக்குறுந்தாண்டகம் - 19

     பிண்டம் போடக்கூடிய (படைத்தல்) பிரம்மனின் தலையைச்
சிவபெருமானது கையை விட்டு நீங்கச் செய்து சாபந் தீர்த்த கண்டியூர் என்று
திருமங்கையாழ்வாரால் துதிக்கப்பட்ட இத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு
செல்லும் வழியில் 6 வது மைலில் உள்ளது.

வரலாறு

     இத்தலத்தைப் பற்றி பிர்மாண்ட புராணத்தின் 8 வது அத்தியாயத்தில்
பேசப்படுகிறது.

     சிவபெருமானுக்கும் பிரம்மனுக்கும் 5 தலைகள் இருந்ததாகவும் ஒரு
சமயம் நிஷ்டையில் அமர்ந்து விழித்த பார்வதி தேவி, அவ்விடம் வந்து
கொண்டிருந்த பிரம்ம தேவருக்கு (தன் பர்த்தாவோ என்று எண்ணி)
பணிவிடை செய்து பாதங்களை அலம்ப, பெருந்தன்மையோடு பிரம்மன்
அதனையேற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தனக்கீடாக ஐந்து தலைகள்
இருப்பதால்தான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதுடன், தனக்கு ஐந்து
தலையென்று பிரம்மனும் கர்வத்தில் மிதக்கிறான் என்று நினைத்த சிவன்
பிரம்மனின் நடுத்தலையைக் கிள்ளியெறிய எத்தனிக்க பிரம்மனின்
மண்டையோடு சிவனின் உள்ளங்கையில் பதிந்து நகராமல் அழுந்திக்
கொண்டது.

     இதனால் பிரம்மஹத்தி தோஷம் தன்னைச் சூழ, அதிலிருந்து
மீள்வதற்கு சிவபெருமான் தீர்த்தயாத்திரை செய்து பூவுலகெங்கும் அலைய,
யார் பிச்சையிட்டாலும் கபாலம் நிறையாமல் போட்டவுடன் மாயமாய் மறைய
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலில், மஹாவிஷ்ணு கேட்டுக்
கொண்டதற்கிணங்க மஹாலெட்சுமி (பூர்ணவல்லி தாயார்) பிரம்ம கபாலத்தில்
பிச்சையிட்டதும் அது நிறைந்து சிவனின் பசித்துயர் ஓய்ந்தது.

     பாத்திரம் (கபாலம்) நிறைந்து பசித்துயர் ஓய்ந்தபோதும் மண்டையோடு
மட்டும் கையைவிட்டு நீங்காமலிருக்கவே