தொடக்கம் | ||
4. திருப்புகலியும், திருவீழிமிழலையும் (வினா உரை) - நட்டபாடை
|
||
34. |
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல்
மான்விழி மங்கையோடும், பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய் மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
35. |
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில்
கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள், பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே! எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய் மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
36. |
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை
கலந்து, துங்கப் பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய் மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
37. |
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல்
மான்விழி மங்கையோடும் பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
38. |
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத்
தையலொடும், தளராத வாய்மைப் புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே! எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
39. |
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி
நிரந்து, தரங்கம் மேல்மேல் பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே! எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
40. |
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு
அன தோளியொடும் கலந்து, பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய் வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
41. |
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண்
தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய் விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
42. |
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில்
வீற்றிருந் தானும், மற்றைப் பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே! எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய் வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
43. |
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த
பான்மை அது அன்றியும், பல் சமணும் புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? |
உரை |
44. |
"விண் இழி கோயில் விரும்பி மேவும்
வித்தகம் என்கொல் இது!" என்று சொல்லி, புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி, நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே. |
உரை |