தொடக்கம் | ||
9. திருவேணுபுரம் - நட்டபாடை
|
||
87. |
வண்டு ஆர் குழல்
அரிவையொடு பிரியா வகை பாகம் பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர் தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம் விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே. |
உரை |
88. |
படைப்பு, நிலை,
இறுதி, பயன், பருமையொடு, நேர்மை, கிடைப் பல்கணம் உடையான், கிறி தப்படையான், ஊர் புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே. |
உரை |
89. |
கடம் தாங்கிய கரியை
அவள் வெருவ உரி போர்த்து, படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர் நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே. |
உரை |
90. |
தக்கன்தன
சிரம் ஒன்றினை அரிவித்து, அவன்
தனக்கு மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர் பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர, மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே. |
உரை |
91. |
நானாவித உருவான், நமை ஆள்வான்,
நணுகாதார் வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான், தேர் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே. |
உரை |
92. |
விண்ணோர்களும்
மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச, கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர் தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே. |
உரை |
93. |
மலையான் மகள்
அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன் தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர் கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம் விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே. |
உரை |
94. |
வயம் உண்ட
அமாலும் அடி காணாது அலமாக்கும், பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல் வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே. |
உரை |
95. |
மாசு ஏறிய
உடலார் அமண்குழுக்களொடு தேரர், தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர் தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார், வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே. |
உரை |
96. |
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம்
தன்னைப் பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல், ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார் கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே. |
உரை |