தொடக்கம் | ||
17. திருஇடும்பாவனம் - நட்டபாடை
|
||
174. |
மனம் ஆர்தரு
மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர்
தூய், தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி, சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில் இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
175. |
மலையார் தரு
மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர், கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில் இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே. |
உரை |
176. |
சீலம் மிகு
சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை, ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர், கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே. |
உரை |
177. |
பொழில் ஆர்தரு, குலை
வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில், தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில், குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
178. |
“பந்து ஆர்
விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை,
முடிமேல் செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல், கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில் எந்தாய்!” என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
179. |
நெறி நீர்மையர்,
நீள் வானவர், நினையும் நினைவு ஆகி, அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி, குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில், எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே. |
உரை |
180. |
நீறு ஏறிய திருமேனியர்,
நிலவும் உலகு எல்லாம் பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா, கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
181. |
தேர் ஆர்தரு
திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து, கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த, ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
182. |
பொருள் ஆர்தரும்
மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி
சீர்த் தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய், மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த, இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
183. |
தடுக்கை உடன்
இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார், உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும், மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல் இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே. |
உரை |
184. |
கொடி ஆர் நெடுமாடக்
குன்றளூரின் கரைக் கோல இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை, அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே. |
உரை |