தொடக்கம் | ||
18. திருநின்றியூர் - நட்டபாடை
|
||
185. |
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு; பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக் காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும் நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே. |
உரை |
186. |
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார், நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும் பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே. |
உரை |
187. |
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை; நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில் உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே! |
உரை |
188. |
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே! |
உரை |
189. |
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில், அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும் கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே. |
உரை |
190. |
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம், சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே! |
உரை |
191. |
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும் பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார், சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே. |
உரை |
192. |
நல்ல மலர்
மேலானொடு ஞாலம் அது உண்டான், “அல்லர்” என, “ஆவர்” என, நின்றும் அறிவு அரிய நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே! |
உரை |
193. |
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே, நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில் மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே! |
உரை |
194. |
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன் குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே. |
உரை |