தொடக்கம் | ||
25. திருச்செம்பொன்பள்ளி - தக்கராகம்
|
||
261. |
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய், திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை மருவாதவர் மேல் மன்னும், பாவமே. |
உரை |
262. |
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய், சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச் சேராதவர் மேல் சேரும், வினைகளே. |
உரை |
263. |
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித் திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய, நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே. |
உரை |
264. |
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய், செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே. |
உரை |
265. |
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல், நிலையா வணங்க, நில்லா, வினைகளே. |
உரை |
266. |
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச் சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை நிறையால் வணங்க, நில்லா, வினைகளே. |
உரை |
267. |
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும் செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை மெய்யால் வணங்க, மேவா, வினைகளே. |
உரை |
268. |
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து, தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை ஆனான் கழலே அடைந்து வாழ்மினே! |
உரை |
269. |
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும், தேரார் செம்பொன் பள்ளி மேவிய, நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே. |
உரை |
270. |
“மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும், பேசா வண்ணம் பேசித் திரியவே, தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய ஈசா!” என்ன, நில்லா, இடர்களே. |
உரை |
271. |
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப் பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும் உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே. |
உரை |