தொடக்கம் | ||
26. திருப்புத்தூர் - தக்கராகம்
|
||
272. |
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர், கங்கை தங்கும் முடியார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே. |
உரை |
273. |
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத் தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர், ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே. |
உரை |
274. |
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட, தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர், ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும் தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே. |
உரை |
275. |
நாற விண்ட நறுமாமலர் கவ்வி, தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர், ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே. |
உரை |
276. |
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத் திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர், பசை விளங்கப் படித்தார் அவர் போலும் வசை விளங்கும் வடி சேர் நுதலாரே. |
உரை |
277. |
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி, தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர், ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் வெண் நிறத்த விடை சேர் கொடியாரே. |
உரை |
278. |
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும் செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர், தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. |
உரை |
279. |
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத் திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவர் அவர் போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. |
உரை |
280. |
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமான் அவன்போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. |
உரை |
281. |
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல் தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர், ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே. |
உரை |
282. |
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் அல்லல் தீரும்; அவலம் அடையாவே. |
உரை |