தொடக்கம் | ||
27. திருப்புன்கூர் - தக்கராகம்
|
||
283. |
முந்தி நின்ற வினைகள் அவை போகச் சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்; அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே. |
உரை |
284. |
மூவர் ஆய முதல்வர், முறையாலே தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர் ஆவர், என்னும் அடிகள் அவர் போலும் ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே. |
உரை |
285. |
பங்கயங்கள் மலரும் பழனத்துச் செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர், கங்கை தங்கு சடையார் அவர் போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே. |
உரை |
286. |
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர், உரையின் நல்ல பெருமான் அவர் போலும் விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே. |
உரை |
287. |
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர் அழகர் என்னும் அடிகள் அவர் போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே. |
உரை |
288. |
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல் திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே. |
உரை |
289. |
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும் தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர், ஆர நின்ற அடிகள் அவர் போலும் கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே. |
உரை |
290. |
மலை அதனார் உடைய மதில் மூன்றும் சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த் தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே. |
உரை |
291. |
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த் தேட நின்றார், உறையும் திருப் புன்கூர் ஆட வல்ல அடிகள் அவர் போலும் பாடல் ஆடல் பயிலும் பரமரே. |
உரை |
292. |
குண்டு முற்றிக் கூறை இன்றியே பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்! வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க் கண்டு தொழுமின், கபாலிவேடமே! |
உரை |
293. |
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன், சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர் நாட வல்ல ஞானசம்பந்தன், பாடல்பத்தும் பரவி வாழ்மினே! |
உரை |